இந்தியா, மே 24 -- நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து, ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதனால் கோவை மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்...