இந்தியா, பிப்ரவரி 4 -- அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன்களை திருப்பித் தர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், காவல்துறையினர் பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

பத்திரிகையாளர்கள் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

விசாரணையின் போது குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கையை அப்லோடு செய்தது யார் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு மூன...