இந்தியா, ஏப்ரல் 29 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். ஒரு மங்களகரமான நாளில் ராஜயோகங்கள் உருவாகுவது மிகவும் சிறப்பானது என கூறப்படுகிறது. அந்த யோகங்களின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்த 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை திருநாள் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஏப்ரல் 30ஆம் தேதி அன்று அட்சய திருதியை திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சர்வாத்த சித்தி யோகம், சதுர் கிரக யோகம், ரவி யோகம், கஜகேசரி யோகம், லட்சுமி நாராயண யோகம், மாளவ்யா யோகம் உள்ளிட்ட ஆறு யோகங்கள் ஒன்றாக உருவாகின்றன.

இந்த அட்சய திருதியை திருநாளில் உருவாகும் ஆறு ராஜயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு கோடீஸ்வர அ...