இந்தியா, ஏப்ரல் 20 -- அட்சய திருதியை: இந்து மத நடைமுறைகளின் படி அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் எந்த வேலையும் இரட்டைப் பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் நாம் எதை வாங்குகிறோமோ அது நம்முடன் வளரும் என்று கூறுப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் லட்சுமி தேவியையும், குபேரனையும் வழிபட்டு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது.

இந்த நாளில் ஒரு சில பொருட்கள் வாங்குவது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்றும், லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக அட்சய திருதியை நாளில் மங்களகரமான பொருட்கள் மற்றும் தங்கம் வாங்குவது மிகவும் லாபம் கொடுக்கும்...