இந்தியா, ஏப்ரல் 29 -- தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குநர் பாலா. சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த பாலா அடுத்ததாக நான் கடவுள் படத்தை எடுத்தார். அந்தப்படத்திற்கு அவருக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்தது. அடிப்படையில் கடவுள் மறுப்பாளரான பாலா அந்தப்படத்தில் யார் கடவுள் என்ற கருவிற்குள் கதை, திரைக்கதை எழுதி படத்தை எடுத்திருப்பார்.

மேலும் படிக்க | Director Bala: வாய்க்கு வந்தது எல்லாம் பேசாதீங்க.. ஒரே கேள்வியால் பட விழாவில் சூடான பாலா!

இதற்கு அவர் பலதரப்பில் இருந்து விமர்சனங்களும் வந்தன. அதன் பின்னர் அவன் இவன், பரதேசி, தாரைத் தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்களை எடுத்தாலும் இந்தப்படங்கள் பாலாவுக்கு பேர் சொல்லும் வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. கடந்த ஜனவரி மாதம் வெளியான வணங...