இந்தியா, ஜூன் 12 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையிலான, விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், அரசு நிதிகள் சுயநலத்தோடு பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

மேலும் படிக்க | 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அல்ல.. பாஜக ஆட்சி தான்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி! ...