இந்தியா, மார்ச் 31 -- உங்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை உள்ளது எனில், நீங்கள் என்னசெய்யவேண்டும் தெரியுமா? இதுகுறித்து இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறிய விவரங்களை இங்கு கொடுத்துள்ளோம். அதை படித்து தெரிந்துகொண்டு, பின்பற்றி பலன்பெறுங்கள்.

வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை இருந்தால், அந்த நபர் பசித்தால் மட்டும்தான் உணவு உட்கொள்ளவேண்டும். பசிக்காவிட்டால் எந்த நேரமானாலும் உணவு உட்கொள்ளக்கூடாது. அதேபோல் உணவை நன்றாக நொருங்க பிசைந்து, மென்று உண்பவர்களுக்கு நிச்சயம் இந்த பிரச்சனை வராது.

நீங்கள் பசித்து புசிக்கவும் நொருங்க உண்ணவும், உண்ட உணவு சிறப்பாக ஜீரணமாகவும் செய்யும்போது மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை குறைந்துவிடும். ஆனால் சிலருக்கு அந்த தொல்லைகள் ஏற்படும்போது, அவர்கள் சீரணாபி சூரணத்தை சாப்பிடலாம்.

இந்த செயல்பாட்டி...