இந்தியா, மே 4 -- தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும் படிக்க:- 'சென்னை முதல் கோவை வரை 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை!' வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இருந்து வரும் காற்று சந்திக்கும் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 கிலோமீட்டர் வேகத்தில்...