இந்தியா, மார்ச் 28 -- ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி (77)உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்த கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். எம்.பி சீட்டுகாக கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் வைகோ அளித்த பேட்டி இதோ.. "வாழ்நாள் முழுவதும் லட்சியங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் ஈரோடு கணேசமூர்த்தி. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்...