இந்தியா, ஏப்ரல் 28 -- TN Chief Minister Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வருகையை ஒட்டி, கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 7 கட்டங்களாக நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றபின், வரக்கூடிய ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

எனவே, தேர்தலுக்கு முன் களத்தில் அரசியல் கட்சிகளின் பரப்புரை அனல் பறந்தது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தீவிர பரப்புரை செய்தார்.

அப்போதும் கடும் வெயில் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அப்போது இருந்து இப்போது வரை கடுமையான புழுக்கம் காணப்படுகிறது. வ...