இந்தியா, மார்ச் 13 -- மனைவியிடம் கருத்து கேட்காமல் வேறு யாரிடம் கருத்து கேட்பார்கள் என பாஜகவில் தனது கட்சியை இணைத்த நடிகர் சரத் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ள நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 22 ஆண்டுகள் எனது அரசியல் பயணத்தில் 16 ஆண்டுகள் சமத்துவ மக்கள் கட்சி தலைவராக பயணித்துக் கொண்டிருந்தேன். 1996ஆம் ஆண்டு அன்று இருந்த ஆட்சியை அகற்ற திமுக-தமாகாவுக்கு தேர்தல் பரப்புரை செய்தேன். அப்போதே என்னால் 25 சீட்டுகள் கேட்டிருக்க முடியும்; ஆனால் நான் அதை கேட்கவில்லை. இன்றைக்கு மோடி அவர்கள் மூன்றாவது முறை பிரதராக வர வேண்டும் என்ற அடிப்படையில் இணைப்பு விழா நடைபெற்றுள்ளது என்றார்.

பாஜகவின் முன்னோடிகள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம்; அவர்கள் சில கருத்துகளை வைத்துள்ளனர்.

கூட்டணியில் இரு...