இந்தியா, மே 6 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்தியின் முதல் சந்திப்பு ரம்யாவுடன் மோதலில் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தீபா, ஐஸ்வர்யாவிடம் வாங்கக்கா ஹாஸ்பிடலுக்கு செக்கப் போயிட்டு வரலாம் என்று சொல்லி கூப்பிட, அவள் என் குழந்தையை எனக்கு பாத்துக்க தெரியும்; செக்கப் எல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நான் நல்லா, ஆரோக்கியமாதான் இருக்கேன் என்று சொல்லி விடுகிறாள்.

இந்த விஷயத்தை தீபா, மீனாட்சி மற்றும் மைதிலியிடம் சொல்ல, அவர்களுக்கு ஐஸ்வர்யா மீது ஏதோ ஒரு சின்ன சந்தேகம் வரு‌கிறது. மறுபக்கம், ஆபீசுக்கு ரம்யா கோபமாக வர, கார்த்திக் அதே ஆபீசுக்கு இன்டர்வியூக்கு வருகிறான். இதை அறிந்து...