இந்தியா, மே 9 -- நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், பொருளாதார கல்வி, அறிவு, புத்தி கூர்மை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று அதாவது நாளை மேஷ ராசியில் நுழைகின்றார். இந்த மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சுக்கிர பகவானின் ராசி ஆன ரிஷப ராசியில் நுழைகின்றார்.

அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்ட...